Sunday, 1 September 2024

ஆர். மல்லிகா

ஆர். மல்லிகா

முனைவர். இரா. பெரியதுரை

 

நான் அனுபவிக்கும் எனது அழகான நாட்கள் ஒவ்வொன்றும், ஏதாவது ஒரு கணப்பொழுதில் ஆர் மல்லிகாவின் நினைவுகளை எனக்கு தராமல், இதுவரை முடிந்ததே இல்லை. அவள் ஞாபகங்கள் ஒவ்வொன்றும் சில நேரங்களில், என்னை அழ வைக்கும், சில நேரங்களில் சிரிக்க வைக்கும், சில நேரங்களில் என்னை முட்டாளாக்கி கூட பார்த்திருக்கிறது, அவளை நினைக்கும் சில பொழுதுகளில் நான் ஒரு ஞானி ஆக கூட உணர்ந்து இருக்கிறேன்.

 ஆர் மல்லிகாவின் நினைவு நாள் இன்று.. ஒரு முழம் மல்லிகை மலரோடும் நான் அவளுக்காக சிந்தும் பல துளி கண்ணீரோடும், அவளின் படம் கூட இல்லாத நிலையில், என் இதயத்தில் வைத்து அழுது கொண்டிருக்கிறேன்.

 பள்ளியில் எனது வகுப்புத் தோழியாக தான் ஆர் மல்லிகா எனக்கு அறிமுகமானால். எனது பள்ளி விடுதியில் மூன்று மல்லிகா கல் இருந்ததால்; பெண் பிள்ளைகளின் விடுதிக்காப்பாளர், டெய்சி அக்கா ஒவ்வொரு மல்லிகாவையும் அவர் இன்சியல் சொல்லித்தான் கூப்பிடுவாங்க. பள்ளியிலும் அவளை ஆர் மல்லிகா என்றுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க. நான் முதல் வகுப்பு படிக்கும் போது எனக்கு எட்டு வயது. மல்லிகாவுக்கு 12 வயது மல்லிகா என்னை விட நாலு வயதுக்கு பெரியவள். அவளுக்கு கொஞ்சம் பார்வை தெரியும். எங்கள் வகுப்பில் மல்லிகாவோடு மூன்று பெண் பிள்ளைகள் நான்கு பையன்கள் எங்கள் ஆறு பேருக்கு முழுமையாக கண்ணு தெரியாது.. எங்கள் வகுப்பில் பெரிய பிள்ளை அவள்தானே? அதனால டீச்சர் இல்லாத நேரத்துல, எங்க கிட்ட எல்லாம் அக்கா தனம் பண்ணி எங்களை எல்லாம் அடக்கி வைப்பாள். பத்தாம் வகுப்பு வரை இருந்த ஐயங்கள் பார்வையற்றோர் பள்ளியில், ஒவ்வொரு வகுப்பிலும் எட்டு பேருக்கு மிகாமலே இருந்தோம். ஒவ்வொரு வகுப்புமே ஒரு குடும்ப மாதிரி தான் இருக்கும். அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் ஒவ்வொருவருமே, எங்களுக்கு அம்மா அப்பாவாக மாறி அன்பைப் பொழியத்தான் செய்தாங்க.

 

நான் வீட்டைப் பிரிந்து பள்ளியில் சேர்க்கப்பட்ட அந்த நாட்களில் என் பெற்றோரை நினைத்து எந்த நேரமும் வகுப்பில் அழுது கொண்டே தான் இருப்பேன். பெரிய காத்தனமாய் மல்லிகாவும் எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே தான் இருப்பாள். ஆர் மல்லிகாவுக்கு தான் அந்த நாட்களில் அதிகம் ஆறுதல் தேவை என்பதை நான் அறிந்திருக்க நியாயம் இல்லை தான். என் கவலை எனக்கு என்றுதான் நான் இருந்திருக்கிறேன். அவள் நிலையை நான் தெரிந்து கொள்ள எனக்கு நான்கு வருடங்கள் தேவை பட்டிருக்கின்றன. மல்லிகாவின் அம்மா மல்லிகாவுக்கு 5 வயது இருக்கும்போதே இறந்து விட்டால் என்பதையும் அதன் பிறகு மல்லிகாவின் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, மல்லிகாவை சரிவர கவனிப்பதே இல்லை என்பதையும், டெய்சி அக்கா மூலம் தெரிந்து கொண்டேன். மல்லிகாவுக்கு கண் தெரியாத காரணத்தினால் அவள் சித்தியும் பலமுறை சூடு வைத்ததையும், அவளை அடித்து துன்புறுத்திக் கொண்டே இருப்பதையும் சொல்லி ஒரு நாள் அழுது கொண்டிருந்தாள். நான் அதைப் போய் ஒரு நாள் வேத பாட வகுப்பில் எங்கள் வகுப்பு ஆசிரியரிடம் சொன்னேன்.

 

 ஆண்டிலிருந்து மல்லிகாவை எந்த விடுமுறைக்கு வீட்டுக்கு அனுப்ப கூடாது என்று நிர்வாக முடிவு செய்துவிட்டது.. நாங்கள் ஒவ்வொரு விடுமுறைக்கும் வீடு செல்லும் போது மல்லிகாய் ஏங்கி தான் போவாள் மல்லிகா விடுதியில் அடிக்கடி திருடுவதாக புகார்கள் வந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் அவள் திருடி மாட்டியும் கொண்டாள்.. பிடிபட்ட பொருட்கள் ஒரு குளியல் சோப்பு ஒரு டப்பா மிச்சர் இவைதான்.

 

 ஒரு நாள் மதிய சாப்பாட்டை நான் முடித்துவிட்டு முதல் ஆளை வகுப்புக்கு வந்திருந்தேன். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மல்லிகா மதியம் சாப்பிட போகாமல் வகுப்பில் இருந்தே அழுது கொண்டிருந்தாள்.. நான் பலமுறை வற்புறுத்தி கேட்டும் எந்த பதிலும் மல்லிகா எனக்கு சொல்லவில்லை. நான் ஓடிப் போய் எங்கள் வகுப்பு ஏஞ்சலின் டீச்சரிடம் சொன்னேன். என்னை வெளியே போக சொல்லிவிட்டு இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் சில ஆசிரியைகளோடு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மல்லிகா ஒரு வாரம் வகுப்புக்கு வரவே இல்லை. ஏஞ்சலின் டீச்சரிடம் நானும் என் நண்பன் வேலாயுதமும் மல்லிகாவை பற்றி கேட்டதற்கு, அவளுக்கு வயிற்று வலி சரியான பிறகு வருவாள் என்று சொல்லி முடிச்சுட்டாங்க.

 

 எனது சிபிஐ மூளை மல்லிகாவை பற்றி தெரிந்து கொள்வதில் தீவிரம் கொண்டு இருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நானும் தொண்டை கீரி ராஜேந்திரனும், இரவு என்ன சாப்பாடு என்பதை தெரிந்து கொள்ள சமையலறைக்கு போனோம். எலே சுப்பையா தொண்டைக்குரிய பிடிச்சுக்கிட்டு இங்க என் மேல வந்த? உளர் வாய் சமையல்காரர் ராணி அக்கா எங்களை கேட்க, நான் தான் சொன்னேன்; அக்கா ராத்திரி என்ன சாப்பாடு என்று கேட்க வந்தோம். உலர்வாய் ராணி அதுவா தான் சொல்லுச்சு; ஏழ சுப்பையா கோட்டிக்கார பயலே, ஆர் மல்லிகா சமஞ்சி இருக்காளாலே; அவளுக்கு உளுத்தம் சோறும் கறி குழம்பு வைக்க அம்மா தான் எங்கள சொன்னாங்க. அதை முடிச்சிட்டு தான் சமைக்கணும். போங்களே பிறகு வாங்க. என்னது ஆர் மல்லிகா சமஞ்சிட்டாளா? எனத் தொண்டைக்கீறி என்கிட்ட சத்தமா கேட்டபோது, அவன் குரலில் பல கீறல்கள் விழுந்து எனக்கு கேட்டது. தொண்டை கீரி வழியா இந்த செய்தி, எங்கள் தோட்டக்காரர் முத்தையா கோனார், தோட்டத்துக்கு பாய்ச்சிய தண்ணீர் பாத்தி உடைஞ்சி, பரவியது போல ஹாஸ்டல் எல்லாம் பரவத் தொடங்கியிருந்தது. ஆர் மல்லிகா எப்படி சமஞ்சிருப்பா? அப்படி நான் பொதுவா கேட்டது, பத்தாம் வகுப்பு அண்ணன்மார்களுக்கு தெரிஞ்சு போச்சு. அன்னைக்கு ராத்திரி பெரிய அண்ணன்மார்கள் எல்லாரும் அவன் அவன் விருப்பத்துக்கு எனக்கு பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டானுக. நான் ஆரமல்லிகாவை அசிங்கப்படுத்தியதாய் அப்போதுதான் உணர்ந்தேன்.

 

 மத்தியானம் டீச்சர் பாடம் நடத்திட்டு இருக்கும்போது, கதிரேசன் எந்திருச்சு, டி டி டீச்சர் ஆர் மல்லிகாவுக்கு எப்போ சா சா சா சா சடங்கு? கிராமத்துல கேட்டது மாதிரி கேட்டுப்புட்டான். கதிரேசன் கொஞ்சம் திக்கி திக்கி தான் பேசுவான். யார்ல உன்னை அப்படி கேட்கச்

 

 சொன்னா அப்படின்னு டீச்சர் அதட்டி கேட்க, சுப்பையா தான் என்னைய கேக்க சோ சோ சொன்னான் அப்படின்னு கொட்டிக்கார பையன் என்னைய காட்டிக் கொடுத்திட்டான். டீச்சர் அன்னைக்கு போட்ட அடி எனக்கு இன்னும் வலிக்குது. அது வேப்பம்பழம் சீசன். தறியில வேலை செய்யுற பெரிய அக்கா மார்கள் எங்க ஹாஸ்டல் முன்னாடி இருந்த வேப்ப மரத்தில் இருந்து விழுந்த, வேப்பங்கொட்டைகளை பொறுக்கிக் கொண்டே; மல்லிகாவை பற்றி பேசிக் கொண்டிருந்ததை, நான் அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தேன். பாவம் தாய் இல்லாத புள்ள மல்லிகா. அவ அம்மா மட்டும் இருந்திருந்தா; அவளால் முடிஞ்சதை அந்த புள்ளைக்கு செஞ்சு தான் இருப்பா. மரகத அக்கா தான் சொல்லுவாங்க; கண்ணு தெரிஞ்ச பிள்ளைகளுக்கு? கடன உடனே வாங்கியாவது, ரேடியா கேடியா வச்சி, சடங்கு நடத்தி போடுவாங்க. குருட்டுப் பிள்ளைகளுக்கு எல்லாம் எவடி செய்யப் போரா? நமக்கெல்லாம் சடங்காது எழவாவது? நாம எல்லாம் அதுக்கு ஆசைப்படக்கூடாது. காலம் மாறும் என்று ஒரு அக்கா சொல்லி முடிச்சிட்டாங்க.

 

 எனது வகுப்புத் தோழர்களின் அம்மாக்கள் எனக்கு அம்மாவாகவும், எனது அம்மா அவர்களின் அம்மாவாகவும், மாறிப் போயிருந்தனர் அந்த பசுமையான எனது பள்ளி நாட்களில். எனது அம்மாவுக்கு மல்லிகாவை மிகவும் பிடித்துப் போயிருந்தது. ஏற்கனவே; மல்லிகாவை பற்றிய எல்லாவற்றையும் நான் என் அம்மாவிடம் சொல்லி இருந்தேன். இதனால்; எனது அக்காவுக்கு பூப்பு பருவத்தில் என்ன உணவுகளை கொடுத்திருந்தார்களோ அதை உணவுகளை, என்னை பார்க்க வரும் நாட்களில் அதே உணவை மல்லிகாவுக்கும் என் அம்மா கொண்டு வந்திருந்தாள். அதிலும் குறிப்பாக, அரிசியை வறுத்து திரித்து, தேங்காய் துருவலை தேங்காய் எண்ணெயில் வறுத்து கலந்து தரும் மாவை சாப்பிடுவதில் மல்லிகா மிகவும் ஆர்வமாய் இருந்தால். இப்படியே மகிழ்ச்சி, குறும்பு கலாட்டாக்களால் எனது மாணவப் பருவம் நிரம்பி வழிய தொடங்கியிருந்தது. இந்த இடத்தில் நான் இதை சொல்லாவிட்டால்; இந்தக் கதை முழுமை பெறாமல் போய்விடக் கூடும். எனது மரணத்துக்கு பிறகு சொர்க்கம் என்று ஒன்று இருக்குமேயானால்; அந்த சொர்க்கத்தில் இதைப் போன்று மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்க முடியாமல், அந்தக் கடவுளும் கூட தோற்றுப்போய், அந்த சொர்க்கத்தையும் வெற்றிடமாக தான் வைத்திருப்பான். இப்படியே; காலங்கள் கற்பூரமாய் கரைந்து என்னை பத்தாம் வகுப்பில் கொண்டு நிறுத்தி இருந்தது. எனது பள்ளியின் ஆண்டு விழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்காக கலை நிகழ்ச்சிகளை தயார் செய்து ஆசிரியர் எங்களுக்காக பயிற்சிகளை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நாட்களில் பாடங்கள் சரியாக நடத்தப்படவில்லை.. இந்த சொர்க்க பூமியில் இருந்து ஒரு இளம் நாற்று, மாற்று நிலத்தில் நட பட இருக்கிறது. இந்தப் பள்ளியை விட்டு நான் மேல்நிலைப் படிப்புக்காக வேறு பள்ளிக்குப் போவதை தான்; நான் இப்படி சொல்கிறேன்..

 

; அந்தப் பள்ளியின் மண்ணை நான் இன்னும் சந்தன புழுதியாய் தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வகுப்பறையும் கோயில்கள் தானே; என்

 

 போன்ற பார்வையற்றவனால் எப்படி கடந்து போய்விட முடியும் எளிதில்? ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு படிக்கட்டுகளும், பாழடைந்த கட்டிடங்களும்,, பூங்காக்களும், தூண்களும், என் போன்ற எத்தனை தலைமுறை பார்வையற்றோரின் கதைகளை உள்வாங்கி வைத்துக் கொண்டிருக்கும் மௌனமாய். என்னை வழி அனுப்பி அடுத்த தலைமுறையை வரவேற்கும் அந்த மண்ணை எப்படி என்னால் மறக்க முடியும்? இப்படியே ஆழ்ந்த சிந்தனையில் அந்த ஆந்தை கட்டட கீழ்ப்படியில் நான் உட்கார்ந்திருந்தேன். மல்லிகா என் தலையை வருடியபடி மேல்படியில் உட்கார்ந்து இருந்தால். அவளின் இளம் தளிர் மார்பு என் முதுகை அழுத்தியபடி இருந்தது. அது என் இதயத்தை குளிர்வித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் என் உடல் முழுவதும் வெப்பம் பரவத் தொடங்கி இருந்தது. இது என் தாயின் பவித்திர வருடலின் மிச்சமா? இல்லை, என் பதில் பருவத்தின் இளமையின் தேடலா?, அந்த மென்மையான பொழுதில், இந்த பிரபஞ்சத்தின் தொடர்பில் இருந்து நான் துண்டிக்கப்பட்டிருந்தேன். எலே சுப்பையா டீச்சர் கூப்பிட்டு தாங்களே; என்ற மாரியப்பனின் குரல் எனக்கும், மல்லிகாவுக்கும், இடையில் விழுந்திருந்த, மௌன திரையை கிழித்தெறிந்திருந்தது. அதுதான் நானும் மல்லிகாவும் தனியாய் அமர்ந்திருந்து பேசிய கடைசி பரிசுத்தமான தருணம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு உடல் முழுவதும் அம்மை பரவி இருந்தது. நான் வேதனை பொறுக்க முடியாமல் அழுததை கேள்விப்பட்ட மல்லிகா சாப்பிடாமல் எனக்காக ஜெபம் செய்ததை என்னால் எப்படி மறக்க முடியும்? நான் மலர்க்கொடி இடம் பேசுவது பிடிக்காமல் எத்தனை முறை என்னிடம் மல்லிகா சண்டை போட்டு இருப்பாள்? இதற்கெல்லாம் என்ன பொருள்? காதலா? பாசமா? இல்லை என் மேல் உள்ள பரிதாபமா அவளுக்கு? இன்று வரை என்னால் அந்தக் களவாணி சிறுக்கி மகளை புரிந்து கொள்ள முடியவில்லை;.

 

அந்த நாளில் எங்களுக்கான பிரிவு உபச்சாரக் கூட்டம் பள்ளி அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களது திறமைகளையும் சிறப்பு இயல்புகளையும் சொல்லி எங்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி பேச வருமாறு எங்கள் பள்ளி முதல்வர் அழைத்தார். சாமிநாதன் எங்களது பள்ளியின் கோதுமை உப்புமாவையும் கறி சோறையும் சிலாகித்து பேசினான். நாங்கள் எல்லாருமே விழுந்து விழுந்து தான் சிரித்தோம். இப்படியே ஒவ்வொருவராக பேச என்னுடைய முறையும் வந்தது. நான் கனத்த இதயத்தோடு என்னுடைய பேச்சை தொடங்கினேன். பத்து ஆண்டுகளில் இந்த பள்ளியின் மூலம் நான் பெற்ற அனுபவம், ஆசிரியர்களிடம் பட்ட அடி, பெற்ற அன்பு, அறிவுரை என்ற பெயரில் ஆசிரியர்கள் போட்ட பிளைடுகள், இப்படியே மகிழ்ச்சியாய் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கட்டத்தில், பேச வார்த்தை இல்லாமல் மௌனித்து நின்றேன் அதன் பிறகு மல்லிகாவை பெரியக்கா என்று குறிப்பிட்டு சொல்லவும் அந்தக் கூட்டத்தில் சிரிப்பாலே எழுந்து ஓய்ந்தது. மல்லிகாவின் கண்ணீர் துளிகள் எல்லா இதயத்தையும் வெண்ணீரால் நனைத்து முடித்தது கூட்டம் முடிய மாணவர்கள் விடுதிக்கும் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கும் கலைந்து சென்று

 

 கொண்டிருந்தனர். நானும் எங்கள் பள்ளியின் படிக்கட்டுகளை தொட்டு வணங்கி விட்டு உடலை மட்டும் எங்கள் விடுதிக்கு எடுத்துச் சென்றேன். நான் இனிமேல் அந்தப் பள்ளியின் பழைய மாணவர் பட்டியலில் இடம் பெறப் போகிறேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்து சேர்ந்திருந்தது.. எல்லோருமே தேர்ச்சி பெற்றிருந்தோம். குறிப்பிட்ட நாளில் மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காக எல்லோருமே பள்ளிக்கு வந்திருந்தோம். மல்லிகாவுக்கு அந்தப் பள்ளியே வீடாகி போனது. எனவே அவள் அங்கேயேதான் இருந்தால்.. பள்ளி முதல்வர் எல்லோருக்காகவும் ஜெபித்து எங்கள் சான்றிதழ்களை எங்கள் கையில் ஒப்படைத்தார், மல்லிகா என் கையைப் பிடித்தபடி உன் சேட்டையை எல்லாம் குறைத்துக்கொள், நல்லபடி, லீவு கிடைச்சா என்னைய பார்க்க கண்டிப்பா வா, அம்மாவை ரொம்ப கேட்டதா சொல்லு, நான் மேற்படிப்பு எல்லாம் படிக்க போறது இல்ல இங்கே தறி வேலை தான் செய்யப் போறேன். உன்ன பிரியறது எனக்கு ரொம்ப கஷ்டமா தாமலே இருக்கு, என்ன மறந்துடுவியால? எனக் கேட்டுக் கொண்டே; அழுதே விட்டாள். எனக்கும் அவளைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் போல் இருந்தது. ஒரு வழியாய் அவளிடம் விடை பெற்று என் அப்பாவோடு வீடு வந்து நான் சேர்ந்திருந்தேன். மல்லிகா இளம்பெண்ணுக்குரிய வளர்ச்சியை பெற்றிருந்தால். அவளின் குரலும் கன்னி குரலாய் எனக்கு இனித்தது. அதற்குப் பிறகும் ஓரிருமுறை மல்லிகாவை சென்று பார்க்கத்தான் செய்தேன்.

 

 காட்சி மாறி இருந்தது காலம் மின்னலைப் போல வெட்டி மறைந்தது. கல்லூரி படிப்பை முடித்த ஒரு வருடத்தில் எனக்கு வேலையும் கிடைத்திருந்தது. மல்லிகாவின் நினைவு அவ்வப்போது என் இதயத்தில் வந்து தான் போனது. ஒரு வழியாய் எனக்குத் திருமணமும் நடந்து முடிந்திருந்தது. நானும் என் மனைவியும் ஒரு நாள் மல்லிகாவை பெரிய அக்கா மார்கள் இருக்கும் எங்கள் பள்ளி விடுதிக்கு பார்க்க சென்றிருந்தோம். என் குரலைக் கேட்ட மாத்திரத்திலே மல்லிகாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி இருந்ததை அவ குரலில் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். அவள் உண்மையிலேயே பெரிய அக்காவாய் மாறிப் போயிருந்தால். தனது குறை பார்வையையும் அவள் இழந்து போய் இருந்தாள். அவளையும் என் திருமணத்துக்கு அழைத்திருந்தேன் ஆனால் அவள் வரவில்லை. என் மனைவியை அவள் முழுமையாய் தொட்டு தடவி பார்த்தால். என் மேல் அவல் கொண்டிருந்த அக்கரையின் நிமித்தம் என் மனைவியை நேர்காணலும் செய்தால். உனக்கு நல்ல பொண்டாட்டிலே அவளை சந்தோசமா வச்சுக்கோ சண்டை போடாத. அதற்குப் பிறகு என் மனைவியும் அவளும் நல்ல தோழியராய் மாறிப் போனார்கள். காலமும் அவள் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. பாயில் படித்தவள் எழுந்திருக்கவே இல்லை அவள் அம்மாவுக்கு இருந்த அதே புற்றுநோய். நாங்கள் ஒரு நாள் வெளியூர் சென்றிருந்தபோது அவள் இறந்தும் போனால். அவள் உடலை யாருக்காகவும் வைத்திருக்கவில்லை அடக்கம் செய்து விட்டார்கள்.. நான்கு வயதுக்கு அவள் என்னை விடப் பெரியவள், அதனால் ஆர் மல்லிகா எனக்கு அக்காவா? சில நாட்களில். எங்கள்

 வீட்டில் வைத்திருந்த மல்லிகை கொடி மொட்டுவிட தொடங்கி இருந்தது.

முற்றும்

 தொடர்புக்கு,

9442715777

 

  

No comments:

Post a Comment