எனக்கு கல்யாணம்..
முனைவர். இரா. பெரியதுரை.
எனக்கு கல்யாணம்.
திருமணத்துக்கு முன்னால் இது வெறும் வாக்கியம். திருமணத்துக்குப் பிறகு இதுவே
வாழ்க்கையாகி போய் விடுகிறது. அது சுபமோ; சாபமோ அவரவர் நிலைமையை பொறுத்தது.
காரணம் இல்லாமல்
அவள் அப்போதுதான் என்னிடத்தில் சண்டை போட்டு முடித்து இருந்தால். அதைப் பற்றி
நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஏதோ ஒரு காரணத்தோடு மாலையில் நானும் அவளும்
சேர்ந்து கொள்வோம். வாசலில் அழைப்பு மணி. எதுவும் நடக்காததை போல என் முகத்தை
வைத்துக்கொண்டு கதவை திறந்தேன். மதியழகன். அவனைப் பார்த்ததுமே; இயற்கையாகவே என்
முகத்தில் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. இதுவும் கடந்து போகும், தற்காலிகமாக
நானும் என் மனைவியும் சேர்ந்து கொண்டோம்.. நிரந்தரமாய் சேர்ந்து கொள்வதற்கு மாலை
வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். வழக்கமான உபசரிப்போடு நானும் அவனும் பேசிக்
கொண்டிருந்தோம். பிறகு எனக்கு கல்யாணம் என்று அவன் எங்கள் கையில் பத்திரிகையை
நீட்டினான்
எனக்கும்
மதியழகனுக்கும் ஒரே வயது. அந்த நாட்களை எங்கள் இருவராலுமே மறக்க முடியாது தான்..
இது போன்ற நட்பு சிலருக்கு தான் அமையும். அந்த வகையில் நானும் அவனும் கொடுத்து
வைத்திருந்தோம். என்று தான் சொல்ல வேண்டும்.. ஒரே தெரு தூரத்து சொந்தமும் கூட.
குப்பை குழி தொடங்கி, கோயில் கோபுரம்
வரை எங்கள் கால்கள் படாத இடமே இல்லை என்று தான் நான் சொல்வேன். என் தோளில் கை
போட்டு அவன் நடந்ததையும், என் சைக்கிளில்
அவனை உட்கார வைத்து நான் ஊர் சுத்தியதையும் ஐம்பூதங்களும் நன்கு அறியும்.. நான்
பள்ளிக்கு சென்று இருக்கும் நேரத்தை, அவன் துயரப் பொழுதுகளாகவே கழித்து வந்தான். அந்த நாட்களில்
அவன் பள்ளிக்குப் போகும் வாய்ப்பை இழந்திருந்தான்.. அவனை நட்பு பாராட்டி
கெடுத்ததில் எனக்கும் கொஞ்சம் பங்கு உண்டு. அதை நான் மறுக்கவில்லை.. ஊருக்குள்
கொஞ்சம் வசதியான குடும்பம்,
மதியின் அப்பா
எனக்கு மாமா முறை வேண்டும்.. அவர் ஒரு சாதாரண அரசு ஊழியர்...
கால்நடைகளும் வயர்
காடுகளுமே அவன் அம்மாவின் உலகமாய் இருந்தது. மதிக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும்
இருந்தார்கள். இதனால் ஊர்காரர்கள் அவனை நடுவான் என்றும் அழைப்பார்கள். மதி அவர்கள்
எல்லாரையும் விட என்னோடு தன் பொழுதுகளை செலவழிப்பதிலேயே ஆர்வமாய் இருந்தான்.
என்னால் இயன்றவரை நானும் அவனை தனித்து விடவில்லை. இந்த உலகமோ அவன் பார்வையில்
இருந்து மறைந்தே இருந்தது. இருந்த போதிலும்; இயற்கையை எதிர்கொள்வதிலும் மனிதர்களை அணுகுவதிலும், என்னை விட அவன்
துணிச்சலும் புத்திசாலி உள்ளவனுமாய் இருந்தான். சில பிரச்சனையான விளையாட்டுகளில்
அவன் ஈடுபடுவதை பல நேரங்களில் நான் தடுத்திருக்கிறேன்.. ஆனாலும் அதை செய்வதில்
அவன் பிடிவாதக்காரனாய் இருப்பான். மரம் ஏறுவது, நீச்சல் அடிப்பது எல்லாமே அவனுக்கு தெரிந்திருந்தது.
தண்ணீர் பாம்பு இருக்கும் இடத்தை நான் அவனுக்கு காட்டி கொடுப்பேன், அவன் அதைப்
பிடித்து ஊருக்குள் கொண்டு வந்து விளையாட்டு காட்டுவான். இதனால்; நானும்
அவனும் பலமுறை
வீட்டில் அடிவாங்கி இருக்கிறோம்.. நான் எங்கள் வயது பெண் பிள்ளைகளை பற்றி எவள்
எவள், எப்படி இருப்பாள்
என்று அவனுக்கு சொல்வேன். அவன் அதை ஆர்வத்துடன் கேட்பான்.. அவனுக்கு பிடித்த
பிள்ளைகளைப் பற்றியும் அவன் கேட்டு தெரிந்து கொள்வான்.. அந்த நாள் தான்; அவன்
வாழ்க்கையில் வசந்தத்தைக் கொண்டு வரும் நாளாய் இருந்தது. இவனைப் பற்றி
கேள்விப்பட்ட பக்கத்து சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கு அழைத்து செல்ல அவன் பெற்றோரை பார்க்க
வந்திருந்தனர்.. ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தவன் அம்மா; மதியின்
அப்பாவின் கண்டிப்பான வார்த்தைகளால் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டார்கள். அவன்
பள்ளி செல்லும் நாளும் வந்தது.. அவன் என்னையும், தான் நேசித்த அந்த மண்ணையும் பிரிவதால் மிகுந்த
வேதனை அடைந்திருந்தான். ஆனாலும் பள்ளிக்குப் செல்வதில் அவன் ஆர்வமாய் இருந்தான்.
நான் ஐந்தாம்
வகுப்பில் படிக்கும் போது அவன் முதல் வகுப்பில் அந்த சிறப்பு பள்ளியில்
சேர்க்கப்பட்டிருந்தான். அவ்வப்போது அவனை அவன் பெற்றோரும் பார்த்து வந்து கொண்டு
இருந்தனர். என் இதயமும் அவன் இல்லாததை வெற்றிடமாகவே உணர்ந்தது. அவன் படிக்கும்
எழுத்து முறையை நன்றாக கற்றுக் கொண்டிருந்ததாலும், பாடங்களை விரைவில் புரிந்து கொண்டதாலும், சில ஆண்டுகளில்
எனக்கு சமமான வகுப்பிலேயே அவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் விடுமுறையில்
ஊருக்கு வரும் நாட்களை, நானும் என்
நண்பர்களும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அந்தப் பள்ளி ஆனது அவன்
வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருந்தது. நாகரீகமாக பேசுவதிலும், எதனையும்
யாரையும், மென்மையாய்
அணுகுவதிலும், எங்கள்
எல்லாரையும் விட, அவன் சிறந்தவனாய்
இருந்தான். அவன் பள்ளியில் நடந்த சில சுவாரசியங்களையும் எங்களோடு அவன் பகிர்ந்து
கொள்வான். மதி பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவனுக்கும் ஒரு அழகான காதல்
இருந்திருக்கிறது. அதையும் அவன் என்னிடத்தில் சொல்லி இருக்கிறான். ஜெயப்பிரியா
தான் அந்த வகுப்பில் அவனுக்கு பிடித்தமான பிள்ளை.. அவன் விடுமுறை முடிந்து
பள்ளிக்கு செல்லும் போதெல்லாம், ஜெயப்பிரியாவுக்காக, அழகு சாதன பொருட்களை நானும் அவனும் போய் வாங்கி இருக்கிறோம்
பலமுறை. ஒருமுறை மதியின் பையை தற்செயலாக பார்த்த அவனது அக்கா, அந்தப் பையில்
பெண் பிள்ளைகள் பயன்படுத்தும் பொருட்கள் இருப்பதை பார்த்து; அவற்றை எடுத்தும்
கொண்டாள். பிரியாவுக்கு கொடுப்பதற்காக பள்ளியில் போய் தேடிப் பார்த்தபோது அவை
அந்தப் பையில் இல்லை. ஒரு நாள் மதிய நக்க என்னை கூப்பிட்டு; பையில்
உள்ளவற்றைப் பற்றி என்னிடம் கேட்டால். நான் சுதாரித்துக் கொண்டு; எல்லாமே மதி
உனக்காக தான் வாங்கினான் என்று சொல்லிவிட்டேன். நான் மதியிடம் பயிற்சி
பெற்றவனாகிற்றே; ஒருமுறை அவன்
விளையாட்டுப் போட்டிக்காக சென்னை சென்றிருந்தபோது; அந்த ஒரு வார இடைவெளியில், கண்ணன் என்ற
வேறொரு பையன், ஜெயப்பிரியாவிடம்
மதியைப் பற்றி தப்பு தப்பா சொல்லி, பிரியாவின் மனதை மடை மாற்றியும் விட்டு விட்டான். பயல்
என்ன செய்வான் வயசு
படுத்தும் பாடு. அடுத்த காதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பாத்திமா. அமைதியாய்
சென்று கொண்டிருந்த அந்த காதலிலும்; எதிர்பாராத விதமாக, வசந்தி டீச்சர் என்னும் சுனாமி வீச தொடங்கி விட்டது.
பாத்திமாவும், மதியும் பேசிக்
கொண்டிருந்தனர். மதி மிதமான காதல் போதையில பாத்திமாவிடம்; பாத்திமா! நான்
உன்னை எப்பவும் கைவிட மாட்டேன்; எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா; அது உன்கூட
மட்டும் தான்.. எப்ப சார் எப்ப மேடம் கல்யாணம்? அப்படித்தான் அந்த சுனாமி விசிச்சு அந்த காதலிலும்.
தயவுசெய்து யார்கிட்டயும் சொல்லிடாதீங்க டீச்சர்; அப்படின்னு வசந்தி டீச்சர் கால்லயே பையன்
விழுந்து இருக்கிறான்.
இப்படியே எங்களது
பள்ளி நாட்கள் தரமான சில பல தரமான சம்பவங்களோடு சென்று கொண்டிருந்தன. எங்கள்
ஊரிலும்; எங்களது வயதை
ஒத்த பெண் பிள்ளைகள்,, தளிர் கொடிகளாய், தளதளவென
வளர்ந்திருந்தனர். நானும் மதியும் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து
இருந்தோம்.. அந்தக் கோடை விடுமுறையில் ஒரு நாள் அந்தப் பெரிய ஊரணியில் நானும்
மதியும், குளித்துக்
கொண்டிருந்தோம். அப்போ மதி தான் சொல்லுவான்; மாப்ள; நம்ம கூட, காலையில எந்திரிச்சதுமே; காட்டுக்கு, ஆயிருக்க வந்த பொட்ட புள்ளைங்க எல்லாம், இப்ப வயசுக்கு
வந்த பிறகு புது பெண்ணாட்டம் பேசக்கூட மாட்டேங்கிறாங்க. அதிலும்; அந்த சொரிசரங்கு
முருகேஸ்வரி பாரு, கூப்பிட்டா
சத்தம் கூட கொடுக்க மாட்டேங்குற டா; அத கேட்டுட்டு நான் சும்மா இருக்க கூடாதா? மதி மாப்பிள்ளை; அந்த சொரி
சிரங்கு முருகேஸ்வரி இப்போ பளபளன் ஆயிட்டாடா. அங்கே முருகேஸ்வரி யோட அக்கா
பொன்னம்மா; துணி துவைத்துக்
கொண்டு இருந்ததை நான் சரியாக கவனிக்கவில்லை. பொன்னம்மா என்ன பாத்து ஒரு மொற
மொறச்சா. மதியை வீட்டுக்கு கூப்பிட்டேன்; அங்கிருந்து வராமலே மதியோ அந்தப் பேச்சை விட
மாட்டேங்கிறான். முருகேஸ்வரி நல்ல குண்டாயிட்டாலடா? ஒரு மாதிரி மதியை வாய பொத்தி வீட்டுக்கு
அழைச்சிட்டு வந்துட்டேன். பொன்னம்மா எங்கள் வீட்டில் சொல்லிவிடுவாளோ என்கிற பயம்
எனக்கு. நான் தான் மதியை பார்த்து கேட்டேன்; கண்ணு தெரியலன்னா எவ்வளவு கஷ்டம் மதி? நானும் கொஞ்ச
நேரத்துல உன்ன மாதிரியே ஆயிட்டேனேடா! முருகேஸ்வரி எங்க சொந்தக்கார பொண்ணு தான், இருந்தாலும் ஒரு
பயம். பொன்னம்மா எங்க ரெண்டு பேரையும் பார்த்து ஒரு நாள்; முருகேஸ்வரி
பார்க்க ரொம்ப அழகா இருக்கா,
நீங்க ரெண்டு
பேரும் ரொம்ப கேட்டதா அவகிட்ட நான் சொல்லி இருக்கிறேன். வேறு என்ன செய்வது? நாங்கள் இருவருமே
அமைதியாய் சிரித்துக்கொண்டோம்.
கொஞ்ச நாட்களிலேயே; எங்களது
மேல்நிலைத் தேர்வு முடிவு வந்திருந்தது. நாங்கள் இருவருமே தேர்ச்சி பெற்று
இருந்தோம். நான் எங்கள் பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில் சேர்ந்து கொண்டேன்.
மதிக்கு கல்லூரி படிப்பதற்கான வாய்ப்பு மதுரையில் தான் இருந்திருந்ததால்; அவன் பள்ளி
நண்பர்களோடு மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்திருந்தான். இளங்கலை
பட்டப்படிப்போடு நான் படிப்பை நிறுத்திக் கொண்டேன். மதி மட்டும் பட்ட
மேற்படிப்பு
முடித்து இருந்தான் அதன் பிறகு அவனுக்கு ஆசிரியர் வேலையும் இட ஒதுக்கீட்டின்
அடிப்படையில் கிடைத்திருந்தது. இதற்கிடையில் மதியின் தம்பிக்கு திருமணமாகி
விட்டது.. எனக்கு விவசாய நிலங்கள் நிறைய இருந்ததால் அதனையும் கவனித்துக் கொண்டு, வியாபாரத்தையும்
செய்து வருகிறேன். எனக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தது.
அவ்வப்போது இப்படிதான் ஏதாவது ஒன்றுக்கு சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள் என்
மனைவி. மதியை என் மனைவிக்கும் ரொம்பவே பிடிக்கும். மதி ஊருக்கு வரும் நாட்கள்
எல்லாம் எங்கள் வீட்டில் தான் அதிக நேரத்தை செலவிடுவான்.. மதியின் அம்மாவும்
முதுமை காரணமாக வயல் வேலைக்கு அதிகம் செல்வதில்லை வீட்டிலேயே ஓய்ந்திருந்தார்கள்.
மதிக்கு அவன் அப்பா பல இடங்களில் பெண் தேடிக் கொண்டிருந்தார். மதிப்பு வேலை
வாய்ப்பு வசதியும் இருந்திருந்த போதிலும் மதிக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்து கூட
பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. மதியின் அத்தை மகள் சொர்ண லட்சுமி ஒரு பொண்ணு
இருந்தாள். அவள் மதியிடம் நல்லாவே பேசுவாள். அவளுக்கு அப்பா கிடையாது. அவர்களும்
கொஞ்சம் ஏழ்மையான குடும்பம் தான். மதியின் அம்மா அவளைப் பெண் கேட்டதற்கு, இல்லாதவங்க என்ன
அவ்வளவு இளக்காரமா போச்சா உங்களுக்கு? என்று சொர்ணலட்சுமியே கேட்டு விட்டாராம். இதை மதியின் அம்மா
என்னிடம் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க. நானும் என் மனைவியும் அவனுக்காக பெண்
தேடிக் கொண்டுதான் இருந்தோம்..
மதிப்போன்றவர்களுக்கு திருமணம் ஆவதில் இவ்வளவு
சிக்கல்கள் இருக்கின்றனவா?
தூங்குவதற்கு
இருள் தேவைப்படுகிறது?, அந்தரங்கத்திற்கும்
இருள் தேவைப்படுகிறது, ஏன்? மனித குல வரலாறு; இருளில் இருந்து
தான் இறைவனால்; எழுதப்பட்டிருக்கிறது
என்பார்கள். இயற்கை மட்டும் தான்; இருளையும், ஒளியையும் சம அளவில் வைத்து பார்க்கிறது. மதி தன்னைப்போல்
பார்வையற்ற பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்தான். அதை
என்னிடம் அவன் பலமுறை சொல்லியும் இருக்கிறான். எனக்கும் அதுவே சரியாகவும் பட்டது.
சில நடைமுறை சிக்கல்களை சொல்லி, மதியின் பெற்றோர் அதை நிராகரித்து விட்டனர். தரகர் வழியாக மதிக்கு ஒரு
சம்பந்தம் வந்திருந்தது. சில நிபந்தனைகளோடு பெண்ணும் பெண் வீட்டாரும், ஒத்துக்
கொண்டிருந்தனர்.. மதி அதை ஒத்துக் கொள்ளவில்லை. காலம் சில சம்பிரதாயங்களையும், சில கடமைகளையும்
கொடுத்து உறவு களுக்கிடையே;
கோடு கிழித்து
விடுகிறது. நானும், மதியும் அதற்கு
விதிவிலக்கா என்ன? நாங்கள் அடிக்கடி
பேசிக் கொள்வதும் குறைந்திருந்தது. எங்களுக்கு நினைவு வரும் போது மட்டுமே பேசிக்
கொண்டோம். சில நேரங்களில் பிடிவாதமும் கொள்கைகளும் தோற்றுப் போய் சமரசம் வெற்றி
பெற்று விடுகிறது. இல்லையா?
காலமும் கடந்து
கொண்டே போவதை கருத்தில் கொண்டு மதியின் சித்தி பார்த்து இருந்த ஒரு பெண்ணை மதியும்
ஒத்துக் கொண்டிருக்கிறான். அதை மதி என்னிடம் சொல்லவில்லை. நேரில் சொல்லி விடலாம்
என்று அவன் நினைத்திருக்கலாம்.; இல்லை எனக்கு அவன் அதிர்ச்சி
கொடுக்க வேண்டும்
என்றும் நினைத்திருக்கலாம். மதிக்கு திருமணம் ஆகப்போவது எனக்கு தெரியும் ஆனால்; எந்த நாளில்
என்பது எனக்கு தெரியாது..
நானும்
இப்படித்தான் ஒரு நாளில் மாப்ள எனக்கு கல்யாணம் மதி எதிர்பாத்திறாத ஒரு தருணத்தில்
போய் சொன்னேன். என்னைப் போலத்தான் மதியும் இப்போது செய்திருக்கிறான். மதியின்
அப்பாவும் அவனோடு தான் பத்திரிக்கை வைக்க வந்திருந்தார். அவர் என்னையும் என்
மனைவியையும் பார்த்து, பத்து நாளைக்கு
முன்னரே வரச் சொல்லிவிட்டார். நாங்களும் தினமும் அவ்வப்போது மதியின் வீட்டுக்கு
போய் வந்து கொண்டு தான் இருந்தோம். எனக்குக் கல்யாணம் என்ற வாக்கியம், மதியின்
வாழ்க்கையாக போகிறது. மதி எதிர்பார்த்த அந்நாளும் வந்தது நானும் என் மனைவியும்
அவன் திருமணத்தின் போது அவனோடு இருக்க வேண்டும் என்றே மதி விரும்பினான்.. அந்த
மகிழ்ச்சியான நாளில் மதியை சாந்தி முகூர்த்தம் வரை எண் பொறுப்பில் எடுத்துக்
கொண்டேன். புதுப் பெண்ணை என் மனைவி அவள் பொறுப்பில் எடுத்துக் கொண்டால்.. அந்த
மண்டபம் உறவுகளாலும் நண்பர்களாலும் நிறைந்திருந்தது.. மதியின் அக்கா தான் தாலி.
கட்டினாள் முடிச்சு போடுவதை அறிந்திறாத மதி கொஞ்சம் சிரமம்தான் பட்டான் முடிச்சு
போடுவதில். மதியின் அக்கா ஒரு மாதிரி சமாளித்து விட்டால்.. முடிச்சு போடுவதிலேயே
இவ்வளவு தடுமாற்றமா? என்பதைப் போல
மதியின் மனைவி பார்த்த பார்வை இருந்தது. தவில் நாதஸ்வர காரர்கள், திருமணப்
பாடல்களையும் முதல் இரவு பாடல்களையும், வாசித்து அந்த இடத்தை, கலை கட்ட செய்து கொண்டிருந்தனர்.
திருமணத்துக்கு
வந்தவர்களுடைய ஆரவாரமும் இதோடு சேர்ந்து கொண்டு; திருமணத்துக்கு வாழ்த்த வந்தவர்களை தெரிந்து
கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது மதிக்கு. சிலர் சத்தம் கொடுக்காமல்
அன்பளிப்பை அவன் கையில் திணித்தனர் சிலரோ அவனை காது கேட்காதவனை போல நினைத்துக்
கொண்டு சத்தமாக தங்கள் பெயரைச் சொல்லி அன்பளிப்பை அவன் கையில் கொடுத்தார்கள். இந்த
சூழ்நிலை மதிக்கு எரிச்சலையே தந்திருந்தது. இப்படியே பல விரும்பத் தகுந்த சில
விரும்பத்தகாத, நிகழ்வுகள் அங்கே
அரங்கேறத்தான் செய்திருந்தது. ஒரு கட்டத்தில் மதி மணப்பெண்ணிடம் ஏதோ சொல்லிக்
கொண்டே இருந்தான் அவள் மதியின் பேச்சை கவனிக்காதவளாய்; அங்கும் இங்கும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இதைக் கவனித்த என் மனைவி; அவளை கையை காட்டி
அவளின் கவனத்தை மதியை நோக்கி திருப்பினால். இந்தப் பெண் மதி அண்ணனை புரிந்து கொள்ள
இன்னும் எவ்வளவு நாள் எடுக்குமோ? என்று என் மனைவி என்னிடத்தில் சொன்னால்.. பெண்ணும்
மாப்பிள்ளையும் சாப்பிடும் நேரம் வந்தது. மணமேடையை விட்டு மதியின் கையைப்
பிடிக்காமலே அவள் நகர்ந்தால்.. நான் மதியின் கையைப் பிடித்துக் கொண்டு, அது புதிய இடம்
என்பதால் அங்கே இருந்த தடைகளை அவள் மதியை பார்க்கும்படி மதிக்கு; சொல்லிக் கொண்டே
வந்தேன். புதியவள் தானே காலப்போக்கில்; மதியை புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது..
பொழுதும் வேகமாய் நகர்ந்தது. இந்தப் பொழுது வரை
தான் நானும் என்
மனைவியும் மதியோடு துணையாய் இருக்க முடியும் என்பதை முடிவு செய்துவிட்டு;. அங்கிருந்து
கிளம்பினோம். மாலைப்பொழுது மயங்க தொடங்கி இருந்தது. மேற்கே வானம் புதுப்பெண்ணை
போல., வெட்கத்தால்
சிவந்திருந்தது. அந்த செவ்வானத்தை; இருள் என்னும் போர்வை மென்மையாய் மூடத் தொடங்கியிருந்தது.
நாங்கள் வரும் வழியில் இருந்த அந்த ஆலமரத்தில்; வவ்வால்கள் இரண்டு ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டிருந்தது.
முற்றும்
தொடர்புக்கு,
9442715777
No comments:
Post a Comment