அன்புடையீர்
வணக்கம்,
அந்தகக்கவிப் பேரவையும் பகிர்வுத் தோழமையும் இணைந்து
நமக்கான கல்வி
நடப்பும் நம்பிக்கையும்
என்ற பொருண்மையில் நூல் ஒன்றை உருவாக்குவது என திட்டமிடப்பட்டுள்ளது. இன்நூலில் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் இயற்றிய கல்வித் தொடர்பான நூல்கள் குறித்த மதிப்புரை இடம்பெறும். கட்டுரையாளர்கள் இரா. நடராசனின் கல்வித் தொடர்பான ஒரு நூலை எடுத்துக் கொண்டு, அது குறித்த மதிப்புரையை எழுத வேண்டும். கட்டுரை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அமைவது நலன்.
இன்நூலில் பார்வை மாற்றுத் திறனாளர் கட்டுரைகள் மட்டுமே இடம்பெறும். அந்தகக்கவிப் பேரவையிலும் பகிர்வுத் தோழமையிலும் இணைந்து செயல்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கட்டுரைகள் பொருளமைதி மற்றும் எடுத்துரைப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஒருங்கிணைப்பாளர்களால் ஒப்புதல் பெற்ற கட்டுரைகள் மட்டுமே நூலில் இணைத்துக் கொள்ளப்படும்.
கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் கட்டுரைக்கு மதிப்புரை செய்யும் நூலின் தலைப்பைச் சூட்டாமல் நூலின் பொருளை ஒட்டி வேறு தலைப்பை அமைக்க வேண்டும்.
கட்டுரையாளர்கள் 10/10/2024க்குள் தங்கள் பெயரையும் தாங்கள் மதிப்புரை செய்யும் நூலின் பெயரையும் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
கட்டுரைகள் 15/11/2024க்குள் அனுப்பப்பட வேண்டும்.
கட்டுரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரி அல்லது ஒருங்கிணைப்பாளர்களின் வாட்ஸப் எண்களுக்கு அனுப்பலாம்.
pakirvuthozhamai@gmail.com
anthakakavi@gmail.com
ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் மு. முருகேசன்
9962445442
மு. ராமன்
9444367850
சே. பாண்டியராஜ்
9841129163
நன்றி.
No comments:
Post a Comment