Thursday 15 March 2018

அந்தகக்கவிப் பேரவையின் 19ஆம் மாதக் கூட்டம் 25/03/2018

அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் பத்தொன்பதாம் மாத நிகழ்வு 25/03/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி தமிழ்ச்சுவை, மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..

தமிழ்ச்சுவை: திரு. ச. ரவிக்குமார் (வாசிப்போம் வலைப்பக்கம்),  கணினிப் பொறியாளர், சென்னை.

மாணவர் கட்டுரை: “உளவியல் நோக்கில் பெண்மை” செல்வி. துர்கா, முதுகலை முதலாம் ஆண்டு, தமிழ்த் துறை, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.

நூல் அறிமுகம்: “நூற்றாண்டில் திராவிடம்” என்ற நூலினை அதன் ஆசிரியர் தோழர். பகுத்தறிவு அவர்கள் (முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை) அறிமுகப்படுத்துகிறார்.

ஆய்வுக்கட்டுரை: “சங்க இலக்கியத்தில் அறிவியல் பதிவுகள்”, திரு. ஜெயசங்கர், தமிழ் ஆசிரியர், அரசுப் பள்ளி, திருவொற்றியூர், சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள  விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 23/03/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

மார்ச் மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
கி.சக்திவேல்
9543466326, 8939187838

தலைவர்

செ.பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்

மு.ராமன்
94443 67850.

நன்றி.

http://anthakakavi.blogspot.in