Sunday 23 July 2017

அந்தகக்கவிப் பேரவையின் பதினோறாவது கூட்டம் 30/07/2017


அந்தகக்கவிப் பேரவையின் பதினோறாவது கூட்டம் 30/07/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் பதினோறாம் மாத நிகழ்வு 30/07/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாணவர் கட்டுரைநூல் அறிமுகம்,  தமிழ்ச்சுவை,  ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் கட்டுரை: “சேக்கிழார் நெறியில் நின்றால் சாதி வேற்றுமைகள் இல்லை"

செல்வி. ஹேமலதா, இளங்கலை மூன்றாம் ஆண்டு, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, அம்பத்தூர், சென்னை.

நூல் அறிமுகம்: "சீம்பால் அருந்திய பாக்கள்" - கங்கை அரசு

திரு. செ.பிரதீப், தமிழ் விரிவுரையாளர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யார்.


தமிழ்ச்சுவை

வழங்குபவர் - பட்டதாரி தமிழாசிரியரான திரு.மு.இராமன் அவர்கள்.

ஆய்வுக் கட்டுரை: “திருமூலர் காட்டும் உடலியல் கூறுகள்”

டி.நித்யா, எம்.ஏ. யோகாகலை பேராசிரியர்

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 28/07/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.

செயலாளர்
மு.ராமன்
9444367850.