அந்தகக்கவிப் பேரவையின் எட்டாவது கூட்டம் 16/04/2017
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின்
எட்டாம் மாத நிகழ்வு 16/04/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை
அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி
மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக்
கட்டுரை மற்றும் ஆய்வுக் கட்டுரை மீதான
விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் கட்டுரை: சோகா இகெதா கலை மற்றும் அறிவியல்
மகளிர் கல்லூரி தமிழ்த்துறையில் இளங்கலை
மூன்றாமாண்டு பயிலும் மாணவி கு. பாரதி அவர்கள் “வானம் வசப்படும்” என்ற தலைப்பில்
கட்டுரை வழங்குகிறார்.
நூல் அறிமுகம்: திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக
பணிபுரியும் க. நவரசன் அவர்கள் ஜான் க்ரே எழுதிய “ஆண்களின் பூர்வீகம் செவ்வாய்: பெண்களின்
பூர்வீகம் சுக்கிரன்” என்ற ஆங்கில நாவலினை அறிமுகம் செய்கிறார்.
ஆய்வுக்கட்டுரை: “பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் K. சங்கர்
அவர்கள் (பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை. பகுதி
நேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு ஆடவர் கலைக் கல்லூரி நந்தனம்) தனது ஆய்வுக்
கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.
நிகழ்ச்சியில்
கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள
எண்களில் 13/04/2017க்குள் தொடர்புக்கொண்டு தங்கள்
வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர்
பிரதீப்
9445749689.
93 83 39 93 83.
செயலாளர்
மு.
ராமன்
94
44 36 78 50.
நன்றி.
http://anthakakavi.blogspot.in/