Monday 15 January 2018

அந்தகக்கவிப் பேரவையின் 17ஆம் மாதக் கூட்டம் 21/01/2018

அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் 17ஆம் மாத நிகழ்வு, 21/01/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், நூல் மதிப்புரை, ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் கட்டுரை: அரிசியிலும் அரசியல் - இலக்கியா
, இராணிமேரி கல்லூரி, இளங்கலை இரண்டாமாண்டு வராலாற்றுத் துறை.

நூல் அறிமுகம்: ஜெயமோகன் எழுதிய பனி மனிதன்” - டாக்டர் எம்.வரதராஜன், உதவிப் பேராசிரியர், ஆங்கிலத்துறை, பகத்சிங் கல்லூரி, புது டெல்லி.

நூல் மதிப்புரை: இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல்” - பேராசிரியர் கெ.குமார், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

ஆய்வுக்கட்டுரை: தற்கால இலக்கியத்தில் எண் கணிதம் - முனைவர்
V.பரத்வாஜ், அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 18/01/2018க்குள்
  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஜனவரி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

க.சிவகுமார்
9952987705, 9025282808, 8939391596

தலைவர்

பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்

மு.ராமன்
94443 67850.

நன்றி.

http://anthakakavi.blogspot.in