Sunday 11 November 2018

அந்தகக்கவிப் பேரவையின் 27ஆம் கூட்டம் 18/11/2018


அந்தகக்கவிப் பேரவையின் 27ஆம் கூட்டம் 18/11/2018


 

கடந்த மாதம் நடைபெற இருந்த பேரவையின் இருபத்து ஆறாம் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஏழாம் மாத நிகழ்வு 18/11/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாதம் ஒரு ஆளுமை:

“வள்ளலாரின் பண்முக ஆளுமை” திரு. சிவக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

நூல் அறிமுகம்

“அண்டநூர் சுறா எழுதிய கொங்கை” திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை:

“அற இலக்கியங்களில் கல்வி” திரு. கார்த்திக், ஆய்வியல் நிறைஞர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 16/11/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்திகை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. சிவக்குமார்

9952987705

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.