Saturday 10 June 2017

அந்தகக்கவிப் பேரவையின் பத்தாவது கூட்டம் 18/06/2017

     அந்தகக்கவிப் பேரவையின் பத்தாவது கூட்டம் 18/06/2017

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் பத்தாம் மாத நிகழ்வு 18/06/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகர் இரண்டாம் தெருவில், பழைய எண் 19, புதிய எண் 44 உள்ள சத்ய சாயி கமிட்டி அரங்கில் நடைபெறும். ராயபேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். நிகழ்ச்சி சிறுகதை நேரம், நூல் அறிமுகம், தமிழ் சுவை (நாட்டுப்புறப்பாடல்), ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறுகதை நேரம்: எழுத்தாளர் திரு.சிவசேகரன் அவர்கள் வழங்குகிறார்.

நூல் அறிமுகம்: திரு.தமிழ் ராணா அவர்கள் தான் எழுதிய “முள்ளின் மீது முத்தங்கள்” என்ற நூலினை அறிமுகம் செய்கிறார்.

தமிழ் சுவை (நாட்டுப்புறப்பாடல்) - வழங்குபவர் பட்டதாரி தமிழாசிரியரான திரு.மு.இராமன் அவர்கள்.

ஆய்வுக்கட்டுரை: “சிலம்புச்செல்வரும் சிலப்பதிகாரமும்” என்ற தலைப்பில் முனைவர் திரு. சே.திவாகர் அவர்கள் (உதவிப்பேராசிரியர் பொன்னேரி அரசுக் கலைக் கல்லூரி) தனது ஆய்வுக் கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 15/06/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.
செயலாளர்
மு. ராமன்
9444367850.
நன்றி.
http://anthakakavi.blogspot.in/