Friday 27 October 2017


அந்தகக்கவிப் பேரவையின் 14ஆம் கூட்டம் 29/10/2017


அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் 14ஆம் மாத நிகழ்வு, 29/10/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் கட்டுரை: “மானுடம் போற்றும் பாரதி” செல்வி. முத்தம்மாள்,  முதுகலை முதலாமாண்டு, தமிழ்த்துறை, சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.

நூல் அறிமுகம்: “சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட்” திரு. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

ஆய்வுக்கட்டுரை: “புனைக்கதை வரலாற்றில் அழகியபெரியவன் பெரும் இடம்” திரு. ராமன், தமிழ் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 27/10/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

அக்டோபர் மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்
சே. பாண்டியராஜ்
98411 29163

தலைவர்
பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்
மு.ராமன்
94443 67850.

No comments:

Post a Comment