Friday 19 May 2017

அந்தகக்கவிப் பேரவையின் ஒன்பதாவது கூட்டம் 28/05/2017

      அந்தகக்கவிப் பேரவையின் ஒன்பதாவது கூட்டம் 28/05/2017

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் ஒன்பதாம் மாத நிகழ்வு 28/05/2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகர் இரண்டாம் தெருவில், பழைய எண் 19, புதிய எண் 44 உள்ள சத்ய சாயி கமிட்டி அரங்கில் நடைபெறும். ராயபேட்டை அஜந்தா பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். நிகழ்ச்சி மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் கட்டுரை: இராணிமேரிக் கல்லூரி வரலாற்றுத்துறையில் இளங்கலை மாணவி எம்.செல்வி அவர்கள் “ஊமைப்பெண்ணா உவமைப்பெண்ணா” என்ற தலைப்பில் கட்டுரை வழங்குகிறார்.

நூல் அறிமுகம்: உலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில்  முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ள ந.தியாகு அவர்கள் மாக்ஸிம் கார்க்கி  எழுதிய “யான் பயின்ற பல்கலைக்கழகம்” என்ற நாவலினை அறிமுகம் செய்கிறார்.

ஆய்வுக்கட்டுரை: “தமிழ்மொழி வளர்ச்சியில் தொல்காப்பியத்தின் பங்கு (எழுத்து, சொல் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு)” என்ற தலைப்பில் R.G.வில்வநாதன் அவர்கள் (முனைவர் பட்ட ஆய்வாளர், மாநிலக் கல்லூரி) தனது ஆய்வுக் கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 25/05/2017க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்
பிரதீப்
9445749689. 9383399383.
செயலாளர்
மு. ராமன்
9444367850.
நன்றி.
http://anthakakavi.blogspot.in/

No comments:

Post a Comment