(அந்தகக்கவிப் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தில் (18/12/2016) அறிமுகப்படுத்தப்பட்டது)
ஆசிரியர் குறிப்பு
இது சினிமாவிற்காக
எழுதப்பட்ட கதையாகும்; உலகப்படங்களின் தோரணையில் இந்தக்கதையில் காட்சி நிகழ்வுகள்
சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த செலவில் இதை ஒரு தரமானத் திரைப்படமாக
உருவாக்கிவிடலாம்.
ஆர்வமுள்ளவர்கள்
சிவசேகர்,
நாவலாசிரியர்,
9962416606
முகநூலிலும் என்னைத்
தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு:
தன் கண்களில் வெளிச்சம் இல்லாத பல பேரை உறுப்பினராகக் கொண்ட அந்தகக்கவி பேரவை
இலக்கிய அமைப்பு என் மீது வெளிச்சத்தைப் பரப்பி என்னையும், என் படைப்பையும்
அறிமுகப்படுத்தியதற்காக தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.
நூல் அறிமுகம்:
இந்தியா, பாகிஸ்தான் எல்லைச் சண்டையில், குண்டுக்காயம் அடைந்த மேஜரை கேம்பில்
கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு, இராணுவ வீரன் சக்திவேல் தலையில் விடிகிறது.
சக்திவேல் மேஜரை தோளில் சுமந்து கொண்டு கேம்பை நோக்கி வேகநடை போடுகிறான். பயணம்
நீள்கிறது. பாதை மாறுகிறது. பகைவர்களின் குண்டுகள் வேறு துரத்துகிறது.
களைப்படைகிறான் சக்திவேல். மேஜரை தனியேவிட்டு தான்மட்டும் தப்பிச் செல்ல
எண்ணுகிறான். பிறகு அதுவும் தவறென்று நினைத்து, அவரை சுட்டுக் கொன்றுவிட
தீர்மானிக்கிறான்.
அதை உணர்ந்துகொண்ட மேஜர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறார்.
சக்திவேல் மேஜரின் முடிவால், அதிக வேதனை அடைகிறான். பின் மனதைத்
தேற்றிக்கொண்டு கேம்பை நோக்கி நடக்கும்போது, வழியில் புதைந்திருந்த கண்ணி வெடியை
மிதித்துவிட்டு, காலை எடுக்க முடியாமல் பயந்து நிற்கிறான்.
வெகுநேரம் வெடியின் மீது நின்று தாக்குப்பிடிக்கிறான். பின் இதில் எந்த பலனும்
இல்லை என்று உணர்ந்து வெடியிலிருந்து காலை எடுத்து சாக முனைகிறான்.
அந்தக்கணம் பாகிஸ்தான் சிப்பாய் பக்ரூதீன் Hands-up என்று கூவி
சக்திவேலை விட தன் துப்பாக்கியால் குறிவைக்கிறான்.
அப்போது சக்திவேல் பக்ரூதீனிடம் தான் கண்ணிவெடிமீது நிற்பதை கூறுகிறான்.
சக்தியின் நிலையைப் பார்த்து பக்ரூவிற்கு இரக்கம் பிறக்கிறது.
பக்ரூ தனது சாமர்த்தியத்தால் சக்திவேலை கண்ணிவெடியிலிருந்து காப்பாற்றுகிறான்.
அதனால் இருவரும் நண்பர்களாகின்றனர். காடுகளில் சுற்றி வருகின்றனர். அப்போது தனது
இராணுவக்குழுவால் சக்திவேலும், பக்ரூதினும் கைது செய்யப்படுகின்றனர்.
எல்லைப்போர் முடிவுக்கு வருகிறது. அப்போது சக்திவேலின் இராணுவக்குழுவின்
தலைவன் சர்மா சக்திவேலின் கையால் பக்ரூதீன் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று
ஆர்டர் போடுகிறான்.
சக்திவேல் சுடமறுக்கவே, பக்ரூதீனை சர்மா சுட்டுக்கொல்கிறான். பின்
சக்திவேலையும் கொல்ல முயல்கிறான்.
அப்போது இடைப்புகுந்து தடுத்த அதிகாரியான இல்தாரை, சர்மாவை
நிராயுதபாணியாக்குகிறான்.
சக்திவேல் அவன் முன் ஆயுதத்தை நீட்டி, பக்ரூவை கொலை செய்ததற்காக பயங்கரமாகத்
திட்டுகிறான். சக்திவேல் சர்மாவை சுட்டுக்கொல்லட்டும் என்று அந்தக்குழு
நினைக்கிறது.
ஆனால் சக்திவேல், தனக்கு உயிர்க்கொடுத்த பக்ரூ இல்லாத உலகத்தில், அவன் கொடுத்த
உயிரோடு தான் வாழ மாட்டேன் என்று, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து விடுகிறான்.
No comments:
Post a Comment