Wednesday 23 January 2019

அந்தகக்கவிப் பேரவையின் 29ஆம் கூட்டம் 27/01/2019


அந்தகக்கவிப் பேரவையின் 29ஆம் கூட்டம் 27/01/2019


தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஒன்பதாம் மாத நிகழ்வு 27/01/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்ச்சுவை :

திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

மாதம் ஒரு ஆளுமை:

எழுத்தறிவித்த இறைவன் “லூயி பிரெயில்” திரு.பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

நூல் அறிமுகம் :

சித்திர பாலா எழுதிய “நீ என் தேவதை” குறுநாவல். திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை :

“திரை இசைப் பாடல்களில் தூது இலக்கியம்” முனைவர் பானுகோபன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக் கல்லூரி, உத்திரமேரூர்.

 

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 25/01/2019க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

நன்றி.

 

No comments:

Post a Comment