Tuesday 27 October 2020

குழந்தைகளை சிந்திப்போம் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

அந்தகக்கவிப் பேரவை
குழந்தைகளைச் சிந்திப்போம்
கட்டுரைகள் வந்து சேர கடைசி நாள் : 14 நவம்பர் 2020 சனிக்கிழமை.
அந்தகக்கவிப் பேரவை 28 ஆகஸ்ட் 2016 முதல் ஒவ்வொரு மாதமும் இலக்கிய
கூட்டங்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஜூலை வரை
நடத்தப்பட்ட கூட்டங்களில் படிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து தமிழ் வனம்
என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டு வருகிறது. இதுவரை இரண்டு பகுதிகள்
வெளியிடப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதி விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இன்நிலையில் நவம்பர் 2020ல் நடத்தப்படவுள்ள பேரவையின் ஐம்பதாம் மாதக்
கூட்டத்தை முன்னிட்டு  “குழந்தைகளைச் சிந்திப்போம்” என்ற தலைப்பில்
மின்நூலினை வெளியிட திட்டமிட்டுள்ளது.
நவீன கல்வி முறை, விளையாட்டின் நிலை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம்
மற்றும்  அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள், வாழ்வியல் மாற்றங்களால்
ஏற்படும் உளவியல் சிக்கல்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும்
வன்கொடுமைகள், பல்வேறு காரணங்களால் தன் குழந்தமையை இழக்கும் குழந்தைகளின்
நிலை  என குழந்தைகளைக் குறித்து பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டியது
அவசியமாகிறது.
இது போன்று குழந்தைகளைக் குறித்த தங்களது சிந்தனைகள் கட்டுரையாக வரவேற்கப்படுகிறது.
கட்டுரைகள் ஒருங்குறியில் இருத்தல் அவசியம்.
எழுத்துரு : லதா.
எழுத்துரு அளவு : 10.
பக்கங்கள் : ஐந்திலிருந்து எட்டு பக்கங்கள்.
கட்டணம் இல்லை.
கட்டுரைகள் வந்து சேர கடைசி நாள் : 14 நவம்பர் 2020 சனிக்கிழமை.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : anthakakavi@gmail.com
மேலதிக விவரங்களுக்கு
தலைவர்
திரு செ. பிரதீப்
94457 49689, 93833 99383.
செயலாளர்
திரு மு. ராமன்
9444367850.
பேரவையின் நிகழ்வுகளையும் கூட்டங்களின் நேரலையினையும் காண எங்கள்
வலையொளியில் இணையுங்கள்.
https://www.youtube.com/channel/UCGWn2hX48zfHzRZRu9GFbdQ
தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நன்றி.
www.Anthakakavi.blogspot.com

No comments:

Post a Comment