Wednesday 15 March 2017

அந்தகக்கவிப் பேரவையின் ஆறாவது கூட்டம்



அந்தகக்கவிப் பேரவையின் ஆறாவது கூட்டம்
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் ஆறாவது நிகழ்வு 26.02.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாணவர் கட்டுரை பகுதியில் பெருமாள்முருகனின்கவிதைகள் சிறுபார்வைஎன்ற தலைப்பில்  மாநிலக்கல்லூரி தமிழ்த்துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயின்றுவரும் திரு. சரவணன் அவர்கள் கட்டுரை வழங்கினார்.
நூல் அறிமுகம் பகுதியில், புது டில்லியில் உள்ள பகத்சிங் கல்லூரியின்  உதவிப் பேராசிரியர் திரு. வரதராஜன் அவர்கள், விநாயக முருகன் எழுதிய சென்னைக்கு மிக அருகில் என்ற நாவலை  அறிமுகப்படுத்தினார்.
ஆய்வுக்கட்டுரை பகுதியில் ஏறு தழுவுதல் அன்றும் இன்றும் என்ற தலைப்பில், ராணிமேரிக் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி. வத்சலா அவர்கள் தன் ஆய்வுக் கருத்துகளை அவையில் எடுத்துரைத்து, அவையோர் கேள்விகளுக்கு விளக்கம் வழங்கினார்.
நன்றி.

No comments:

Post a Comment