Wednesday 15 March 2017

அந்தகக்கவிப் பேரவையின் ஐந்தாவது கூட்டம்



அந்தகக்கவிப் பேரவையின் ஐந்தாவது கூட்டம்
அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் ஐந்தாவது நிகழ்வு 18.12.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நூல் அறிமுகம் பகுதியில் நாவலாசிரியர் திரு. சிவசேகரன் ஐயா அவர்கள் தன்னுடைய சக்திவேலும் பக்ருதினும்என்ற நாவலை  உணர்வுப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
ஆய்வுக்கட்டுரை பகுதியில் குறிஞ்சிப்பாட்டில் சிக்மன்ஃப்ராய்டின் ஆளுமை வளர்ச்சிஎன்ற தலைப்பில் நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் விரிவுரையாளராக உள்ள திரு. முனைவர். க. இரவி அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையை வழங்கி, பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு  செவ்வனே விளக்கம் அளித்தார்.
நன்றி.

No comments:

Post a Comment