Sunday 4 December 2016

பேரவையின் நான்காம் நிகழ்வு



அன்புடையீர்
அந்தகக்கவிப் பேரவையின் நான்காவது கூட்டம் 27.11.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலபெருமாள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. பேரவை நடைபெற இடம் வழங்கிய பள்ளிக்கும், நிகழ்ச்சி நடைபெற அனைத்து வகையிலும் உதவியாக இருந்துவரும் ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் வாசிப்பகத்திற்கும், அனைத்து வாசிப்பாளர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. ஆய்வாளர் சிவக்குமார்  அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாணவர் கட்டுரைப் பகுதியில் “புத்த சமயம்” என்ற தலைப்பில், பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர் மணிகண்டன் அவர்கள் கட்டுரை வழங்கினார். நூல் அறிமுகம் பகுதியில் “முட்டையின் பலமும் போராளி சிறுவனும்” என்ற நூலினை அந்த நூலின் ஆசிரியர் திருமதி. சரோஜா சகாதேவன் அவர்கல் அறிமுகம் செய்து உரையாற்றினார். ஆய்வுக் கட்டுரைப் பகுதியில் “தமிழ் இலக்கண இலக்கியங்களில் உயிரியல் பாகுபாடு” என்ற தலைப்பில், ராணிமேரிக் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் க.சுதன் அவர்கள் ஆய்வுரை வழங்கினார். ஆய்வுரை மற்றும் அதன்மீதான விவாதப் பகுதியை சே. பாண்டியராஜ் அவர்கள் நெறிப்படுத்தினார். மாணவர் கட்டுரை வழங்கிய மணிகண்டன் அவர்களுக்கு வாசிப்பாளர் திருமதி. விஜயலட்சுமி பால்ராஜ் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். நூல் அறிமுகம் செய்த எழுத்தாளர் திருமதி. சரோஜா சகாதேவன் அவர்களுக்கு திரு. செல்வமணி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். பேரவையின் அடுத்தக்கூட்டம் குறித்த விவரங்களை தலைவர் பிரதீப் அவர்கள் அறிவித்தார். ஆய்வாளர் லட்சுமிநாராயணன் அவர்கள் நன்றியுரை நவில்ந்தார். ஆய்வாளர் வத்சலா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில்  நாவலாசிரியர் திரு. சிவசேகரன் அவர்கள், புதிய மாணவன் பத்திரிக்கையாளர் ஆசாத் அவர்கள், ஆய்வாளர்கள் மற்றும்  தன்னார்வளர்கள் கலந்துக்கொண்டனர். பேரவையின் தொடக்கம் முதல் எல்லாவற்றிலும் உறுதுணையாக உள்ள திரு. ரவிக்குமார் அவர்களும் கலந்துக்கொண்டு தனது பங்களிப்பை வழங்கினார். பேரவையில் வழங்கப்படும் கட்டுரைகளையும் வழக்கம்போல் அவரே தட்டச்சு செய்து வழங்கியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!

No comments:

Post a Comment