அன்புடையீர் வணக்கம்,
அந்தகக்கவிப் பேரவையின் இரண்டாவது கூட்டம் செப்டம்பர் 25 ஆம்தேதி அன்று
பத்மசேஷாத்ரி பள்ளியின் நுழைவாயிலில் உள்ள ஓர் மரத்தடியில் நடைபெற்றது.
உத்திரமேரூர் அரசுக் கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக உள்ள திரு. மு.
பானுகோபன் அவர்கள் “கண்ணதாசன் திரைஇசைப்பாடல்களில் இறை நம்பிக்கை” என்ற தலைப்பில்
கட்டுரை வழங்கினார். செய்யாறு அரசுக் கலைக்கல்லூரி தமிழ் விரிவுரையாளர் திரு.
பிரதீப் அவர்கள் வரவேற்புரை வ்வழங்கினார். ராணிமேரிக்கல்லூரி தமிழ்த்துறையின்
முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. லட்சுமிநாராயணன் அவர்கள் கூட்டத்தை நெறிப்படுத்தி
நடத்திச் சென்றார். பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு கட்டுரையாளர் பதிலளித்தார்.
மாநிலக்கல்லூரி தமிழ்த்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. செல்வமணி அவர்கள்
நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
எழுத்து வடிவில் இருந்த கட்டுரையை அச்சிட்டு வழங்கிய வாசிப்பாளரும் தமிழ்
ஆர்வளருமான திரு. ரவிக்குமார் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment