அன்புடையீர்
வணக்கம்,
அந்தகக்கவிப்
பேரவையின் முதல் கூட்டம் ஆகஸ்ட் 28 ஆம் நாள் நடைபெற்றது. மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட
ஆய்வாளர் திரு. செல்வமணி அவர்கள் “காலச்சுவடில் பெண் எழுத்து” என்ற தலைப்பில்
கட்டுரை வழங்கினார். சென்னை சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு. சே.பாண்டியராஜ் வரவேற்புரை வழங்கினார்.
செய்யாறு அரசுக் கலைக்கல்லூரி தமிழ்த்துறை
விரிவுரையாளர் திரு. பிரதீப் அவர்கள் கூட்டத்தை நெறிப்படுத்தி நடத்தினார்.
ராணிமேரிக் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. லட்சுமிநாராயணன்
அவர்கள் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. வாசிப்பாளரும் தமிழ்
ஆர்வளருமான திரு ரவிக்குமார் அவர்கள் எவுத்து வடிவில் இருந்த கட்டுரையை அச்சிட்டு
வழங்கினார் அவருக்கு இந்த நேரத்தில் எங்களது மனமார்ந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறோம். இனி கட்டுரையைக் காண்போம்.
No comments:
Post a Comment