Wednesday, 23 January 2019

அந்தகக்கவிப் பேரவையின் 29ஆம் கூட்டம் 27/01/2019


அந்தகக்கவிப் பேரவையின் 29ஆம் கூட்டம் 27/01/2019


தங்கள் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஒன்பதாம் மாத நிகழ்வு 27/01/2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்ச்சுவை :

திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

மாதம் ஒரு ஆளுமை:

எழுத்தறிவித்த இறைவன் “லூயி பிரெயில்” திரு.பிரதீப், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

நூல் அறிமுகம் :

சித்திர பாலா எழுதிய “நீ என் தேவதை” குறுநாவல். திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை :

“திரை இசைப் பாடல்களில் தூது இலக்கியம்” முனைவர் பானுகோபன், விரிவுரையாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக் கல்லூரி, உத்திரமேரூர்.

 

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 25/01/2019க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

தை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

நன்றி.

 

Tuesday, 1 January 2019

பார்வையற்ற பாவலர் அருளிய திருக்கழுக்குன்றப் புராணம் ஆங்கில விளக்கத்துடன் வெளியிடப்பட்டது.


பார்வையற்ற பாவலர் அருளிய திருக்கழுக்குன்றப் புராணம் ஆங்கில விளக்கத்துடன் வெளியிடப்பட்டது.


ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர் அந்தகக்கவி வீரராகவர் பலச்  சிறப்புமிக்க நூல்களையும், தனிப்பாடல்களையும் இயற்றியவர். இலக்கணக் கவி, சீட்டுக்கவி என்றெல்லாம் அறியப்படும் அந்தகக்கவி வீரராகவர், உலா, பிள்ளைத்தமிழ், களம்பகம், கோவை, தல புராணங்கள் என பல நூல்களையும், சில தனிப் பாடல்களையும்  இயற்றியுள்ளார்.  சோழநாடு, ஈழநாடு என பல நாடுகள் பயணித்து அங்கு ஆட்சிசெய்த மன்னர்களைப் பாடி பாராட்டும் பரிசும் பெற்றவர். இவர் கவித்திறனையும் புலமையையும் கண்ட புலவர் ஒருவர், “ஒட்டக்கூத்தன் கவியும் ஓங்கிய கம்பன் கவியும் பட்டப்பகல் விளக்காய்ப்பட்டதே அட்டத்திக்கும் வீசும் கவி வீரராகவனாம் வேளாளன் பேசுங்கவி கேட்டப்பின்” என்று வியந்து புகழ்ந்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகு சிறப்புமிக்க  புலவர் அந்தகக்கவி பிறவியிலேயே பார்வையற்றவர் என்பதும், இறைவனடிச் சேர்ந்த இலக்கணக்கவியின் இழப்பை ஏற்க இயலாத கயத்தாற்றரசன் இவருக்கு இறங்கட்பா பாடியிருப்பதும்  தமிழ்ச்சமூகம் அறிந்ததே.

பார்வையற்ற பாவலர் அந்தகக்கவி வீரராகவர் அருளிய திருக்கழுக்குன்றப் புராணம் 23/12/2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10:30 மணி அளவில், திருக்கழுக்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் வேதகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஆர்.கே மகாலில் வெளியிடப்பட்டது.  இந்நூல் 23 சருக்கங்களும்,  834 பாடல்களும் கொண்டது. திருக்கழுக்குன்றப் புராணத்தையும், அந்தகக்கவியின் புகழையும் உலகிலுள்ள அனைவரும் அறிய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் குழிப்பாந்தண்டலம் நடராஜன் உமாபதி அவர்கள் அனைத்துப் பாடல்களுக்கும் ஆங்கில விளக்கம் எழுதி, வித்துவான் காஞ்சி சபாபதி முதலியார் அவர்கள் எழுதிய உரையையும் சேர்த்து பதிப்பித்து, திண்டிவனம் ஸ்ரீ அன்னைபதி நூலகத்தின்  மூலம்  வெளியிட்டுள்ளார். விழாவில் திருமிகு. நடராஜன் உமாபதி அவர்கள் பேசும்போது அந்தகக்கவி என்ற மாபெரும் புலவனின் பெருமைகளை வியந்து போற்றினார். அவர் சிறு வயது முதல் கண்ட மலையின் வளமையையும், பட்சிகளின் அரசன் வேதகிரீஸ்வரரை வழிப்பட்டதையும் குறிப்பிட்டு திருக்கழுக்குன்றத்தின் பெருமையை எடுத்துரைத்தார்.

விழாவிற்கு திரு.செல்வராஜ் DSP (ஓய்வு) அவர்கள் தலைமை வகித்தார். சித்தாந்த ரத்தினம் திரு. சுந்தர் ஐயா அவர்கள் நூலை வெளியிட, மயிலம் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நூலின் இரண்டாம் பிரதியை அந்தகக்கவிப் பேரவையின் நிறுவன உறுப்பினரும், ராணிமேரிக் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளருமான  லட்சுமிநாராயணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். திருக்கழுக்குன்றப் புராணத்தை ஆங்கில விளக்கத்துடன் பதிப்பித்த நடராஜன் உமாபதி ஐயா அவர்களுக்கு அந்தகக்கவிப் பேரவையினர் அனைவரும் இணைந்து சிறப்பு செய்தனர்.

480 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை 200 ரூபாய் மட்டுமே.

நூலின் அட்டைப்படம், தாளின் தரம் உள்ளிட்ட அனைத்தும் அருமை!

ரூபாய் 500க்கு விற்கப்பட வேண்டிய நூல் வெறும் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது கூடுதல் சிறப்பு.

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவும், பிரதியைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பளித்து அந்தகக்கவிப் பேரவையை சிறப்பித்த நடராஜன் உமாபதி ஐயா அவர்களுக்கும், அவருக்கு பேரவையை அறிமுகம் செய்திட்ட துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி தமிழ்த்துறையின் பேராசிரியர் சதானந்தம் ஐயா அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

Monday, 10 December 2018

அந்தகக்கவிப் பேரவையின் 28ஆம் கூட்டம் 16/12/2018


அந்தகக்கவிப் பேரவையின் 28ஆம் கூட்டம் 16/12/2018


தங்கள் படைப்புகளை வழங்க விரும்புவோர் எங்களைத் தொடர்புக்கொள்ளவும்

பார்வையற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து எட்டாம் மாத நிகழ்வு 16/12/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்ச்சுவை :

திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

மாதம் ஒரு ஆளுமை:

“பாரதி காட்டிய அடையாளங்கள்” திரு. லட்சுமிநாராயணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

நூல் அறிமுகம் :

விரல் மொழியர் மின்னிதழ் வெளியிட்ட “முகவரி” (கலைஞர் சிறப்பிதழ்) திரு. சே. பாண்டியராஜ், இந்தியன் வங்கி, அம்பத்தூர், சென்னை.

ஆய்வுக்கட்டுரை :

“பழம்பாடல்கலில் மண் சார்ந்த அறிவியல் பதிவுகள்” திருமதி. வத்சலா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,ராணிமேரிக் கல்லூரி, சென்னை.

 

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 14/12/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

மார்கழி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. சக்திவேல்

8939187838

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.

 

Sunday, 11 November 2018

அந்தகக்கவிப் பேரவையின் 27ஆம் கூட்டம் 18/11/2018


அந்தகக்கவிப் பேரவையின் 27ஆம் கூட்டம் 18/11/2018


 

கடந்த மாதம் நடைபெற இருந்த பேரவையின் இருபத்து ஆறாம் கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஏழாம் மாத நிகழ்வு 18/11/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாதம் ஒரு ஆளுமை:

“வள்ளலாரின் பண்முக ஆளுமை” திரு. சிவக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

நூல் அறிமுகம்

“அண்டநூர் சுறா எழுதிய கொங்கை” திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை:

“அற இலக்கியங்களில் கல்வி” திரு. கார்த்திக், ஆய்வியல் நிறைஞர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 16/11/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்திகை மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. சிவக்குமார்

9952987705

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.

Thursday, 25 October 2018

அந்தகக்கவிப் பேரவையின் 26ஆம் கூட்டம் 28/10/2018

தவிர்க்க முடியாத  காரணத்தால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அந்தகக்கவிப் பேரவையின் 26ஆம் கூட்டம் 28/10/2018


 

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஆறாம் மாத நிகழ்வு 28/10/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாதம் ஒரு ஆளுமை:

“வள்ளலாரின் பண்முக ஆளுமை” திரு. சிவக்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

நூல் அறிமுகம்

“அண்டநூர் சுறா எழுதிய கொங்கை” திரு. மு. இராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

ஆய்வுக்கட்டுரை:

“திருக்குறளும் பொருளியளும்” திரு. மதன், இந்திய ஆட்சி பணி நாடுநர் (IAS aspirant),  சென்னை.

 நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 26/10/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஐப்பசி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. சிவக்குமார்

9952987705

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.

Tuesday, 25 September 2018

அந்தகக்கவிப் பேரவையின் 25ஆம் கூட்டம் 30/09/2018


அந்தகக்கவிப் பேரவையின் 25ஆம் கூட்டம் 30/09/2018


 

அன்புடையீர்,

அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து ஐந்தாம் மாத நிகழ்வு 30/09/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, தமிழ்ச்சுவை,  மாணவர் கட்டுரை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

மாதம் ஒரு ஆளுமை:

“பேதமை நீக்கிய பெரியார்” திரு. கி. சக்திவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

மாணவர் கட்டுரை:

“தொட்டனைத்தூறும் மணற்கேணி” செல்வி. பெ. மோ. பூஜா, முதுநிலை கணிதம், இரண்டாம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

 

நூல் அறிமுகம்

“நகுலனின் நிழல்கள்” புதினம் திரு. ச. ரவிக்குமார், நிறுவனர்,வாசிப்போம் வலைப்பக்கம்.

ஆய்வுக்கட்டுரை:

“பசுமைப் போரும் நவீன தொழில்நுட்பமும்” திரு. சாமுவேல் முனைவர் பட்ட ஆய்வாளர், ஆங்கில துறை,   கிறித்தவக் கல்லூரி சென்னை.

 

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 28/09/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

புரட்டாசி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திரு. கி. லட்சுமிநாராயணன்

9092961787

தலைவர்

திரு. செ. பிரதீப்

94457 49689. 93 83 39 93 83.

செயலாளர்

திரு. மு. ராமன்

94 44 36 78 50.

நன்றி.

Monday, 24 September 2018

தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் வெளியீடு


தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் வெளியீடு


நெஞ்சார்ந்த நன்றி!

அந்தகக்கவிப் பேரவையின் இரண்டாம் ஆண்டு நூல் வெளியீட்டு விழா 16/09/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரியில் சிறப்பாக நடைப்பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.  பேரவையின் செயலாளரும், மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியருமான மு. ராமன் அவர்கள் வரவேற்புரை வழங்க, பேரவையின் தலைவரும், அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளருமான செ. பிரதீப் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

தெற்கு இரயில்வேவில் துணை முதன்மை பணியாளர் அலுவலராக பதவி வகிக்கும்  திருமிகு. தி.தே. தினகர் அவர்கள் தமிழ் வனம் (இரண்டாம் பகுதி) நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில் அந்தகக்கவி என்ற பெயர் தன் உள்ளத்தில் உரைந்து, நினைவில் வின்ற நிகழ்வை சிறப்பாக பகிர்ந்துக்கொண்டார். மேலும், பார்வையற்றோர் தம் துறைசார்ந்து மட்டும் நின்றுவிடாமல் தங்கள் ஆய்வு பரப்பை பல்துறையிலும் விரிவு செய்ய வேண்டும் என்று எடுத்துறைத்தார்.

சிறப்புமிக்க இருபெரும் கல்லூரிகளின் தமிழ்த்துறைத் தலைவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினர். சென்னைமாதனாங்குப்பத்தில் உள்ள சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சே. கண்மணி அவர்கள் தம் உரையில் தமிழ் ஆர்வத்தைத் தம்முள் விதைத்து தமிழைக் கற்கச் செய்த தன் தந்தையை நினைவுக்கூர்ந்து, தமிழால் தாம் பெற்றப் பேற்றினையும், தமிழ்ப் படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்றும் அரங்கிற்கு அறிவுருத்தி இடம் அமர்ந்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.முருகன் அவர்கள் பேசுகயில் தமிழ் படித்ததால் தான் இப்பொழுது இருக்கும் நிலையையும், தன்னோடு படித்த சக நண்பர்களின் தற்போதய நிலையையும் விளக்கி தமிழின் பெருமையை அரங்கிற்கு உணர்த்தினார். தமிழை விரும்பிப் படித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவது உறுதி என்பதை பல உதாரணங்கள் வழி விளக்கினார். தமிழ் வனம் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றிருக்கும்  கட்டுரைகளின் தலைப்பு  குறித்தும், ஆய்வாளர்களின் உழைப்பு, தேடல் குறித்தும் வியந்து பாராட்டினார். விழாவில் கலை நிகழ்ச்சி வழங்க இருந்த மாணவர்களுக்கு இராமானுஜர் குறித்த புத்தகத்தை நினைவாக வழங்கி ஊக்கப்படுத்தினார். பேரவையின் செயல்பாடுகளை எண்ணி மகிழ்ந்து பேரவையினருக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராக பணிப் புரியும் முனைவர் இரா. பசுபதி அவர்கள் தம் வாழ்த்துரையில், தமிழ் வனம் இரண்டாம் பகுதி நூல் குறித்தும், அதன் பெயர் பொருத்தம் குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தார். சவால் நிறைந்த இன்றைய உலகில் பார்வையற்றோர் கணினி, ஆண்டிராய்டு செல்பேசி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கற்பதன் அவசியத்தையும், அதன் தேவைகளையும் எடுத்துரைத்தார்.

ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷனின் தன்னார்வலர் மற்றும் பார்வையற்றோருக்கான வாசிப்பாளர் திருமதி. பத்மா ஆனந்த் அவர்கள் நூல் குறித்து வியந்து மகிழ்ந்து பேசினார். பார்வையற்றோர் முன்னேற்றத்திற்காக தன் இறுதி மூச்சு உள்ளவரைப் பணியாற்றுவேன் என்று சொல்லி, பேரவைக்கு வாழ்த்துத் தெரிவித்து விடைப்பெற்றார்.

நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து சோகா இகெதா கலைமற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பார்வையற்றோருக்கான தொழில்நுட்பக் கல்வியைப் பயிலும் பார்வையுள்ள மாணாக்கியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழைப் போற்றும் பாடல், நாட்டுப்புற பாடலுக்கு நாட்டியம், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம் என அரங்கம் கலைக்கட்டியது. இயல் இசை நாடகம் என தங்கள் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்திய மாணாக்கியருக்கு, தமிழ் ஆர்வலரும், இந்தியன் வங்கி அம்பத்தூர் கிளையின் முதன்மை மேலாளருமான  திரு. அமீருல்லா ஜவஹிர் அவர்கள் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

பிற்பகல் 02:30 மணி அளவில் சமுதாயக் கருத்துகளை அதிகம் வலியுறுத்திய கவிஞர் மகாகவியே! புரட்சிக்கவியே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் (பணி நிறைவு) முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் நடுவராக பங்கேற்று சிறப்பித்தார்.

மகாகவியே என்ற அணியில், செல்வி. கு. பாரதி, (முதுகலைத் தமிழ், இரண்டாம் ஆண்டு, சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சென்னை.) திரு. சு. செல்வமணி, (நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.) திரு. கு. ராமலிங்கம், (பட்டதாரி தமிழ் ஆசிரியர், பதிப்பகச் செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி,  கோடம்பாக்கம், சென்னை.) திரு. தி. மாரிச்செல்வம், (முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர், சி.ச.சுப்பைய்யா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.).

புரட்சிக்கவியே என்ற அணியில், செல்வி. பெ. மோ. பூஜா, (முதுநிலை கணிதம், இரண்டாம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.) திரு. கி. லட்சுமிநாராயணன், (நிறுவன உறுப்பினர், அந்தகக்கவிப் பேரவை. முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ராணிமேரிக் கல்லூரி, சென்னை.) திரு. இரா. பாரதிராஜா, (பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  காட்டுமன்னார்கோயில், கடலூர்.) திரு. இரா. சின்னதுரை, (பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,  க.பரமத்தி, கரூர்.).

இரு அணியினரும் கவிஞர் வழி நின்று தங்கள் கருத்துக்களை பாக்களால் வாதிட்டு வலியுறுத்தி அணிக்கு வலு சேர்த்தனர். பேச்சாளர்களின் கருத்துக்களை நன்கு ஆராய்ந்த நடுவர் அவர்கள் செய்திகளைத் தொகுத்து கூறி, மகாகவி சொன்னான், புரட்சிக்கவி செய்தான்! என்று சொல்லி தம் தீர்ப்பினை வழங்கினார்.

ஒவ்வொரு மாதமும் நடைபெற்ற கூட்டங்களில் கட்டுரை வாசித்த கட்டுரையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் திருமிகு. தி.தே. தினகர் அவர்கள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். ஒலி ஒளி கலைஞர், புகைப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் அன்பளிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  பேரவையின் நிறுவன உறுப்பினர்களும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுமான திரு. கி. சக்திவேல், திரு. க. சிவக்குமார், திருமதி. சி. வத்சலா நிகழ்ச்சியினை சிறப்பாக தொகுத்து வழங்கினர். விழாவினை தங்கள் சேவையால் சிறப்பித்த KRM சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கும், சோகா இகெதா கல்லூரி மாணாக்கியருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பேரவை நிறுவன உறுப்பினரும், இந்தியன் வங்கிப் பணியாளருமான திரு. சே. பாண்டியராஜ் நன்றியுரை நவில்ந்தார். நாட்டுவாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

விழா சிறப்பாக நடைபெற சலுகை விலையில் அரங்கம் ஏற்பாடு செய்து உதவிய வைணவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் முருகன்  அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பேரவையின் தமிழ் வனம் என்ற நூலின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்பான முறையில் பதிப்பித்து வரும் AKS Books World மற்றும் ஜீவா பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. கந்தசாமி அவர்களுக்கு பேரவை சார்பாக மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம். நூலினை மெய்ப்பு பார்த்திட்ட சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் முனைவர். அபிராமி அவர்களுக்கு நன்றி நவில்வதில் உவகைக்கொள்கிறோம்.  அனைத்து கூட்டங்களிலும் உற்றத் துணையாக இருந்து உதவிவரும் வாசிப்போம் வலைப்பக்கத்தின் நிறுவனர் திரு. ரவிக்குமார் அவர்களுக்கு எங்கள் நன்றியினை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக்கொள்கிறோம். சலுகை விலையில் சிறுதானிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய திரு சிவக்குமார்  அவர்களுக்கும்  எங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். விழா சிறப்பாக நடைபெற உதவிய கொடையாளர்கள், பங்கேற்று சிறப்பித்த விருந்தினர்கள், பேச்சாளர்கள், பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள், வாசிப்பாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வனம் செய்வோம்

தமிழ் வனம் செய்வோம்!

நன்றி.

விழா புகைப்படங்களைக் காண தொடுப்பைச் சொடுக்கவும்

https://photos.app.goo.gl/FfsNpJo7kG3KkY5J9